Sunday, 3 June 2012

குழந்தையோட போறப்ப

போன வாரம் சனிக்கிழமை ஒரு அவசர வேலைக்காக ஆபீஸ்க்கு வர வேண்டி இருந்தது. எப்பவும் சனிகிழமை லீவ் தான். யாரும் வரமாட்டாங்க, அதனால நாம கொஞ்சம் மெதுவா கெளம்பி வந்தேன்.

வர்ற வழில ரெண்டு இடத்துல சிக்னல் இருக்கும். அதுல ஒரு சிக்னல்ல ஒரு பொண்ணு அவங்க குழந்தையோட வண்டில வந்தாங்க. அவங்களும் நான் போற வழில தான் போனாங்க.


அவங்க குழந்தை பின் பக்கமா உக்கார வெச்சிருந்தாங்க, அவங்க கொஞ்சம் குண்டு வேற. அந்த குழந்தை ஒரு பக்கமா சாஞ்ச மாதிரி உக்காந்திருந்தது.


உடனே அவங்கள நிறுத்தி விஷயத்த சொன்னேன். இதில அவங்க தலைக்கு ஹெல்மெட் வேற போட்ருந்தாங்க. அந்த குழந்தை கூப்பிட்ட கூட அவங்களுக்கு கேக்காது.


பொதுவா குழந்தைகள் இந்த மாதிரி வண்டில போறப்ப கொஞ்ச நேரத்துல தூங்க ஆரம்பிச்சிடும். இந்த மாதிரி நேரத்துல நாம கூட ஒருத்தர துணைக்கு கூட்டிட்டு போலாம். அப்படி முடியதவங்களுக்கு சில யோசனைகள்.


வண்டி ஓட்டும் பெண்கள் நிறய பேர் சுடிதார் தான் போடறாங்க, அதன் துப்பட்டா வுடன் சேர்த்து குழந்தைகளை இடுப்பில் கட்டி கொள்ளலாம் ( இது என் அருமை தங்கை சொல்லிக்குடுத்த யோசனை)


இதுக்காகவே சில  ஜாக்கெட் விக்குது, அதை முன்புறம் அல்லது நமக்கு பின் புறம் மாடி அதில் குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு செல்லலாம்.


இதுக்கு எல்லாம் வசதி இல்லனா முடிந்தவரை வண்டி முன்புறம் நமது கால்களுக்கு இடையில் குழந்தகைளை வைத்து கொள்ளலாம்.


இது பெண்களுக்கு மட்டும் இல்லங்க, ஆண்களுக்கும் தான். முடிந்தவரை குழந்தைகளை கொண்டு செல்லும் பொது கியர் இல்லாத வாகனகளை உபயோகிக்கவும். கியர் இல்லாத வாகனகள் ஒரு கையில் சுலபமாக இயக்க முடியும்.


இந்த மெசேஜ்க்கு சரியான படம் கிடைக்கல அதனால தான் ரொம்ப லேட். அது இல்லாம 2 மாசமா ஆபீஸ்ல ஷிப்ட் டைம் மாத்தினால எதுமே எழுத முடியல. இல்லைனா மட்டும்  நீ எழுதற லட்சணம் எங்களுக்கு தெரியாதான்னு நீங்க துபரதுக்குள்ள நா ஜூட்.


சாம கோடங்கி மாதிரி இரவு மட்டும் போயிட்டு வர்ற வேல இப்ப கொஞ்சம் மாறி மதியம் போயிட்டு, நடு சாமத்துல தெரு நாய் தொரதுரதுல இருந்து தப்பிச்சி பத்திரமா வீட்டுக்கு வந்து சேரதுக்குள்ள ........ ஆவ்வ் .....

1 comment:

  1. ஓஹ் ஆபீஸ் போரரம் மா !!!!!!!!!!

    ReplyDelete