Showing posts with label இப்படியும். Show all posts
Showing posts with label இப்படியும். Show all posts

Sunday, 3 June 2012

குழந்தையோட போறப்ப

போன வாரம் சனிக்கிழமை ஒரு அவசர வேலைக்காக ஆபீஸ்க்கு வர வேண்டி இருந்தது. எப்பவும் சனிகிழமை லீவ் தான். யாரும் வரமாட்டாங்க, அதனால நாம கொஞ்சம் மெதுவா கெளம்பி வந்தேன்.

வர்ற வழில ரெண்டு இடத்துல சிக்னல் இருக்கும். அதுல ஒரு சிக்னல்ல ஒரு பொண்ணு அவங்க குழந்தையோட வண்டில வந்தாங்க. அவங்களும் நான் போற வழில தான் போனாங்க.


அவங்க குழந்தை பின் பக்கமா உக்கார வெச்சிருந்தாங்க, அவங்க கொஞ்சம் குண்டு வேற. அந்த குழந்தை ஒரு பக்கமா சாஞ்ச மாதிரி உக்காந்திருந்தது.


உடனே அவங்கள நிறுத்தி விஷயத்த சொன்னேன். இதில அவங்க தலைக்கு ஹெல்மெட் வேற போட்ருந்தாங்க. அந்த குழந்தை கூப்பிட்ட கூட அவங்களுக்கு கேக்காது.


பொதுவா குழந்தைகள் இந்த மாதிரி வண்டில போறப்ப கொஞ்ச நேரத்துல தூங்க ஆரம்பிச்சிடும். இந்த மாதிரி நேரத்துல நாம கூட ஒருத்தர துணைக்கு கூட்டிட்டு போலாம். அப்படி முடியதவங்களுக்கு சில யோசனைகள்.


வண்டி ஓட்டும் பெண்கள் நிறய பேர் சுடிதார் தான் போடறாங்க, அதன் துப்பட்டா வுடன் சேர்த்து குழந்தைகளை இடுப்பில் கட்டி கொள்ளலாம் ( இது என் அருமை தங்கை சொல்லிக்குடுத்த யோசனை)


இதுக்காகவே சில  ஜாக்கெட் விக்குது, அதை முன்புறம் அல்லது நமக்கு பின் புறம் மாடி அதில் குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு செல்லலாம்.


இதுக்கு எல்லாம் வசதி இல்லனா முடிந்தவரை வண்டி முன்புறம் நமது கால்களுக்கு இடையில் குழந்தகைளை வைத்து கொள்ளலாம்.


இது பெண்களுக்கு மட்டும் இல்லங்க, ஆண்களுக்கும் தான். முடிந்தவரை குழந்தைகளை கொண்டு செல்லும் பொது கியர் இல்லாத வாகனகளை உபயோகிக்கவும். கியர் இல்லாத வாகனகள் ஒரு கையில் சுலபமாக இயக்க முடியும்.


இந்த மெசேஜ்க்கு சரியான படம் கிடைக்கல அதனால தான் ரொம்ப லேட். அது இல்லாம 2 மாசமா ஆபீஸ்ல ஷிப்ட் டைம் மாத்தினால எதுமே எழுத முடியல. இல்லைனா மட்டும்  நீ எழுதற லட்சணம் எங்களுக்கு தெரியாதான்னு நீங்க துபரதுக்குள்ள நா ஜூட்.


சாம கோடங்கி மாதிரி இரவு மட்டும் போயிட்டு வர்ற வேல இப்ப கொஞ்சம் மாறி மதியம் போயிட்டு, நடு சாமத்துல தெரு நாய் தொரதுரதுல இருந்து தப்பிச்சி பத்திரமா வீட்டுக்கு வந்து சேரதுக்குள்ள ........ ஆவ்வ் .....

Thursday, 19 January 2012

ATM - கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

என்னமோ தெரியல, இந்த வாரம் முழுக்க  வங்கி பத்தின விஷயமாவே காதுல விழுது. காலைல ATM ல பணம் எடுக்க போனப்ப சில பல விஷயங்கள் தோணிச்சி. அத பத்தி தாங்க இனிக்கி சொல்ல போறேன்.

ATM சென்ட்டர் உள்ள நாம போன சில தவறுகளை பற்றி தான் இந்த பதிவு. 

கும்பலா போககூடாதுன்னு அறிவிப்பு இருக்கும் (ஆனா நாம அங்க தான் நம்ப நட்பு, காதலிய விடு குடுக்காம போவோம்)

வெளிய எவ்ளோ பேர் காத்திருந்தாலும் நமக்கு என்னன்னு சிலர் இல்லாத "Balance" செக் பண்ணிட்டே இருப்பாங்க. 

சிலர் அப்ப தான் புதுசா கணக்கு தொடங்கினவங்கள கூட்டிட்டு வந்து ட்ரைனிங் குடுப்பாங்க. (எப்படி மெசின்ல இருந்து பணம் எடுக்குறதுன்னு)

சிலர் அங்க வந்து தான் சொந்த கதை, சோக கதை எல்லாம் போன்ல பேசிட்டு இருப்பாங்க. (போன் பேச கூடாதுன்னு போர்டு இருக்கும், அங்க இருக்குற செக்யூரிட்டி காட்டு கத்தலா கத்திட்டு இருப்பார் அது எல்லாம் காதுலையே விழாது)

இந்த மாதிரி நாம பண்றப்ப நமக்கே தெரியாம சில தப்பு நடக்குது, அது என்னன்னா 

முதல்ல நேரம் வீணாகுது

அவசரமா பணம் எடுக்க வேண்டி இருப்பவர்கள் பாதிக்க படுகிறார்கள் 

ATM ல இருந்து வெளிய வர பணம் 30 செகண்ட்க்கு மேல இருக்காது. அதுக்குள்ள வெளில எடுக்கலன்னா அது திரும்பவும் உள்ள போய்டும். சில மேதாவிகள் பணத்த கைல எடுக்காம, அக்கௌன்ட்ல மிச்சம் எவ்ளோ இருக்குன்னு ஸ்லிப்ப கைல வெச்சிட்டு பாத்துட்டு இருப்பாங்க, அதுக்குள்ள பணம் திரும்ப உள்ள போய்டும். அப்புறம் கஸ்டமர் கேர்,  வங்கி எல்லாத்துக்கும் அலைஞ்சி திரும்ப வாங்கணும். 

சிலருக்கு பணத்த எடுக்கற அக்கரை, ATM கார்டுகளை திரும்ப எடுக்கறதுல இல்ல. கார்ட மறந்து பொய் மெசின்ல விட்டுட்டு போய்டுவாங்க, ஒன்னு அது மெசின் குள்ள போய்டும், இல்லனா அடுத்து யாரது வந்தங்கான அவங்க எடுப்பாங்க, அது திரும்ப கிடைகிறது நம்ப அதிர்ஷ்டம் தான்னு சொல்லணும். 

இதில் மற்ற வங்கி ATM ல போட்ட திரும்ப வாங்கறதுக்கு கொஞ்சம் தாமதம் ஆகலாம், இதில் சில வங்கிகள் மற்ற வங்கி ATM கார்டுகளை திருப்பி தருவது இல்லை. 

இந்த மாதிரி இம்சைகள் நம்ம தலைல நாம்பளே மண்ண போட்டுக்கற மாதிரி, நமக்கு தான் இடைஞ்சல்.

இதே மாதிரி வங்கி தரப்புல இருந்தும் சில இடைஞ்சல்கள் இருக்கு, சில நேரத்துல மெசின் சரியாய் வேலை செய்யாது, பணம் இருக்காது, எல்லாம் சரியாய் இருந்தாலும் பணம் வெளில வராது, ஆனா நம்ப கணக்குல இருந்து கொறஞ்சி இருக்கும். கொஞ்சம் அனுபவம் இருப்பவர்கள் பதட்டம் அடையாமல் கஸ்டமர் கேர் செண்டர்க்கு போன் செய்து விவரம் சொல்லி சரி செய்து கொள்வார்கள்.

இது நகர வாசிகளுக்கு சரி, ஆனால் படிக்காத அல்லது இந்த அனுபவம் இல்லாத மக்கள் என்ன செய்ய முடியும். வங்கி தரப்பில் இதை பற்றி கொஞ்சம் யோசித்து கொஞ்சம் சுலபமாக எல்லா தரப்பு மக்களும் பயன் பெற செய்தால் நன்றாக இருக்கும்.

நம் அவசர தேவைகளை விரைவில் பூர்த்தி செய்து கொள்ள தான் இந்த சேவைகள், இதை சரியான முறைகள் பயன் படுத்தி கொள்வது நம் கையில் தான் உள்ளது.

இத்தோட இந்த பதிவை முடிசிக்கிறேன், கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்னு நீங்க சொல்றது கேக்குது. 




Tuesday, 17 January 2012

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு ( தமிழ்ல சொன்ன கடன் அட்டை). நம்ப ஊர்ல அரிசி, பருப்பு எல்லாம் இலவசமா கிடக்குதோ இல்லையோ, கிரெடிட் கார்டு இலவசமா வீடு தேடி வருது, அதும் நீங்கள் சரி என்று சொல்லிய அடுத்த ஒரு சில நாட்களில்.

இந்த இலவசத்திலும் சில பல பிரச்சினைகள் தானாகவே முளைக்கிறது ( ஓசில கெடைக்குதுன்னு வாங்குனிங்கள்ள இப்ப அனுபவினு சிலர் சொல்றது இந்த பதிவை எழுதிகிற போதே எனக்கு கேக்குது.)

என்ன மாதிரி தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு கிரெடிட் கார்டு வாங்கறது ரொம்ப சுலபம். எப்படினு கேடிங்கன்ன, எங்களுக்கு சம்பளம் எப்படியும் ஒரு தனியார் வங்கி மூலமாக தான் வரும் (நீ செய்யற வேலைக்கு சம்பளம் வேற தரங்களா, பாதி நிறம் முக புத்தகம், ட்விட்டர், ஜிமெயில் இந்த மாதிரி வேலைகள செஞ்சிட்டு நேரம் கெடச்ச கொஞ்சம் வேலையும் செய்யறானு நண்பர்கள் அடிக்கடி சொல்லறது இப்பதாங்க ஞாபகம் வருது). முதல்ல அந்த பாங்க்ல இருந்து சேமிப்பு கணக்கு (சம்பள கணக்குனு கூட சொல்லலாம்) ஆரம்பிக்க, விண்ணப்பத்தை நிரப்பி தர சொல்லுவாங்க, அதுலயே நம்ப போன் நம்பர், ஈமெயில் மற்றும் தற்காலிக, நிரந்தர முகவரி எல்லாமே சம்பந்தப்பட்ட பேங்க் க்கு போய் சேந்துடும்.

ஒரு 10 நாளைக்கு எந்த தொந்திரவும் இருக்காது. அப்புறம் அந்த பாங்க்ல இறுதி அதன் கிரெடிட் கார்டு ஆபிசர் போன் செய்வார், பேசுறது ரொம்ப கனிவா தான் இருக்கும், ஏன்னா வியாபாரம் நடகனும்ல்ல. இது எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம் தான். இப்ப என்ன சொல்லவரனு கேக்குறிங்க, ஒரே நிமிஷம் ஒரு கோர்வையா சொல்ல முயற்சி பண்றேன், ஆனா அந்த கருமாந்திரம் மட்டும் எனக்கு வர மாட்டேன்குது,

இந்த மாதிரி ஓசில வந்த கிரெடிட் கார்டு நானும் 2 - 3 வாங்கி வெச்சிருக்கேன். எல்லோர மாதிரியும் எனக்கும் சில பிரச்சினை வந்தது, ஆனா நாம்ப கொஞ்சம் அலெர்ட், அதனால கொஞ்சம் பேசி, மிரட்டி அதை சுமுகமா முடிச்சிட்டேன்.


ஆனா போன மாதமும், இந்த மாதமும் ஒரு புது ரூபத்துல பிரச்சினை வந்தது. அது என்னன்னா ஒரு பேங்க் கிரெடிட் கார்டுல ஒரு 15 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினேன். அத "EMI " அதாவது அந்த தொகையை மூன்று முதல் பனிரெண்டு மாத தவணைகளில் செலுத்தலாம். நம்ப கைல இவ்ளோ பணம் இல்ல (அப்ப நீயெல்லாம் "சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்யறேன்னு வெளில சொல்லதனு ஒரு அசரிரி கேக்குது), என்னங்க பண்றது எங்களுக்கும் கொஞ்சம் கமிட்மென்ட் இருக்குல்ல.


சரி வாங்கினதுக்கு பணம் கட்டிதாங்க ஆகணும், எனவே பேங்க் கஸ்டமர் கேர் சென்டர்க்கு போன் பண்ணி, விவரம் சொல்லி, "EMI" பற்றி கேட்டா, ஒரு குண்டு தூக்கி போட்டாங்க, உங்க கார்டுக்கு இந்த வசதி இல்லன்னு சொல்லிட்டாங்க. சரி வேற எதாவது செஞ்சி உதவி செய்ய முடயுமானு கேட்ட, தற்சமயம் உங்களுக்கு இதில் எந்த உதவியும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க.


யோசிச்சு பாத்ததுல்ல, இந்த பேங்க் இல்லைன்னா என்ன அதுதான் இன்னும் இரண்டு பாங்க்ல கிரெடிட் கார்டு வாங்கிருக்கோம்ல அவங்க கிட்ட கேக்கலாம்னு நெனச்சி அடுத்த பேங்க் கஸ்டமர் கேர்க்கு போன் பண்ணி பேசுனா ஒரு உபயோகமான தகவல் தந்தாங்க, அதாவது அந்த வங்கிக்கு இந்த வங்கி பணம் செலுத்திவிடும் அதை நாம் தவணை முறையில் செலுத்தலாம்.


சரி என்று சொல்லி செலுத்த வேண்டிய வங்கி இன் கிரெடிட் கார்டு நம்பர் மட்டும் சொல்லிவிட்டு மற்ற விவரங்களை சொல்லி கொஞ்சம் நிம்மதியா இருந்தேன். ஒரு 2 நாள் கழித்து ஒரு குறும் செய்தி (அதாங்க sms ) என்னோட கிரெடிட் கார்டு ஒரு மும்பை ஆன்லைன் கம்பெனி மூலமாக ருபாய் 1000 சுரண்டி இருப்பதாக அந்த தகவலில் இருந்தது.


உடனடியாக அந்த வங்கி கஸ்டமர் கேர் சர்வீஸ் நம்பரில் போன் செய்து விவரத்தை கூறினேன். அவர்களும் சரிபார்த்து அதை உறுதி செய்தார்கள். நான் இருக்கும் இடம் மற்றும் அந்த "Transaction" நான் செய்யவில்லை என்று சொல்லி, அதை சரி செய்து, கிரெடிட் கார்டு பிளாக் செய்து, வேறு கிரெடிட் கார்டு வாங்கி, அதுக்கு 100 ருபாய் தண்டம் அழுது, இதோடு போனதே என்று நிம்மதியா இருந்தேன்.


அடுத்த மாதமும் கொஞ்சம் மருத்துவ மனை செலவிற்காக கொஞ்சம் கார்டு ஐ சுரண்ட, திரும்பவும் இதே தொல்லை, ஆனால் இந்தமுறை கொஞ்சம் யோசித்து, வங்கி கஸ்டமர் கேர் அதிகாரிகளிடம் பேசி, இந்த தொடர் சுரண்டல்களை பற்றி சொல்லி, இது தொடரும் பட்சத்தில் நான் கார்டு ஐ வங்கியில் திருப்பி செலுத்திவிட்டு உரிய வழக்கு தொடர போவதாக சொன்னேன். அவர்கள் இரண்டு நாள் அவகாசம் கேட்டார்கள், இரண்டு நாள் கழித்து போன் செய்தேன், அதற்குள் எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதாக கூறினார்கள்.


நண்பர்களே கிரெடிட் கார்டு சாபமும் அல்ல வரமும் அல்ல. யோசித்து செயல் படுங்கள். இது சின்ன விஷயம் தான், ஆனால் நேரமும், போன் பில் என நிறைய நம் பக்கத்தில் நாம் செலவிட வேண்டும்.

எனக்கு வந்த தொல்லையை பற்றி தெரிந்து கொள்ள

http://www.consumercourt.in/credit-card/43371-hdfc-bank-credit-card-carefull.html 

இதை படித்த பிறகு தான் என்னைப்போல் நிறைய பேர் இப்படி பாதிக்க பட்டிருப்பது தெரிய வந்தது.

கடந்த ஆண்டு முதலாக இந்த பிரச்சினை இருந்தாலும், அதை இன்னும் வங்கியன் தொழில் நுட்ப பிரிவில் சரி செய்யது வருத்தம் அளிக்கிறது.

Monday, 9 January 2012

நான் செய்த உதவி

தினமும் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம், அவர்களில் நமக்கு உதவும் நிலை சிலருக்கு இருக்கும், சிலருக்கு நாம் உதவி செய்யும் நிலை நமக்கு இருக்கும். அப்படி நம்மால் உதவும் நிலையில் இருக்கும் மனிதர்களை பற்றி தான் இந்த பதிப்பு.

ஆறு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு சின்ன சம்பவம். அப்போது நான் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பனியன்
கம்பெனியில் "கிராபிக் designer " ஆக வேலை செய்து கொண்டிருந்தேன். வேலை விஷயமாக சில நேரத்தில் வெளியே செல்வது உண்டு. (இதுக்கு தனியா பைசா தரமாட்டாங்க, நாம தான் செலவு செய்யனும்)

ஒரு இரவு நேரத்தில், வேலை முடித்து வீடு திரும்பும் நேரத்தில் (கொஞ்சம் பசி வேறு) எதாவது சாப்பிடலாம் என்று தோனவே, பண பையை பார்த்தேன் (அதாங்க purse ), நீ வெச்சிருக்கிற 5 - 10 க்கு இது வேற வேணுமான்னு நீங்க முனுமுனுக்கறது எனக்கு நல்லாவே கேக்குது. நெனச்ச மாதிரி 8 ருபாய் சில்லறை மட்டும் தான் இருந்தது (என்ன பண்றது அப்போ சம்பளம் கம்மிதாங்க) இப்ப தான் "டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு" ன்னு குடுக்கற எல்லா கார்டும் வாங்கி வெச்சிருக்கேன்.

சரி நம்ப விஷயத்துக்கு வருவோம், பக்கதுல ஒரு சின்ன கடை இருந்தது, சூடா பஜ்ஜி, பட்டாணி இந்தமாதிரி சாப்பிடும் கடை அது. நமக்கு பஸ்க்கு 2 ரூபா தான். பாக்கி 6 ரூபா இருக்குல, அது எதாவது லைட் ஆ  சாப்பிடலாம் யோசிச்சிட்டு இருந்தப்ப ( 6  ரூபா தண்டா என்னமோ 600 ரூபாய்க்கு எதோ வாங்க போறமாதிரி யோசிக்கறனு திட்ற "mindvoice" எனக்கும் கேக்குது.


பரிதாபமான ஒரு குரல், எதாவது தர்மம் பண்ணுங்கன்னு கேட்டுச்சி. பாக்க ரொம்ப பாவமா இருந்ததாலும், நம்ப வீட்டுக்கு தானே போறோம் அதுக்குள்ள இத சாப்பிடாட்டி என்னனு நெனச்சி, இருந்த காசுல ஒரு 5 ருபாய் நாணயத்தை (நம்புங்க நா தர்மம் பண்ணேன்)  அவங்களுக்கு குடுத்துட்டு, நேர போய் பஸ் ஸ்டாப்ல பஸ் வரதுக்காக காத்திருந்தேன்.

அப்பதாங்க அந்த சம்பவம் நடந்தது. என்கிட்ட உதவி கேட்ட அந்த நபர் அந்த பஸ் நிறுத்தத்துக்கு பக்கதுல வந்து ஒரு ஆட்டோல ஏறி போனாங்க. கொஞ்சமல நேரியவே ஷாக் அடிச்ச மாதிரி இருந்தது. பக்கதுல இருந்த இன்னொரு ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரிச்சப்ப, அவர் சொன்னது ஷாக் அடிச்சதுல தேள் கொட்டினா எப்படி இருக்குமோ அப்படி இருந்திச்சி.

அந்த நபர் ஆட்டோ ஓட்டுனருக்கு தினசரி வடிக்கையாளராம், பிறரிடம் இருந்து இப்படி உதவி கேட்டே தினமும் பிழைப்பை நடத்துகிறார் என்றும், தினமும் குறைந்தது 250 ருபாய் சம்பாதிக்கிறார் என்றும் சொன்னார். தினம் போக வர ஆட்டோ, இரவு நேரத்தில் "டாஸ்மாக்" என்று சந்தோசமாக வாழ்கை நடத்துவதாக சொன்னார். நல்ல வேளை நா காசு குடுத்ததா சொல்லல. சொல்லிருந்தா அங்கேயே காரி துப்பிருப்பார். அடுத்து பதிலா தான் நீங்க இப்ப துப்ப போறீங்க.

அதுக்கு அப்புறம் இந்த மாதிரி உதவி பண்ணறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிப்பேன்.

இந்த சம்பவத்துக்கு அப்புறம் தான் எப்படி உதவி செய்யறதுன்னு கத்துகிட்டேன். நீங்களும் கத்துகோங்க.

முடிந்தவரை பண உதவி செய்வதை தவிர்க்கவும்.
அவர்களுக்கு என்ன தேவைன்னு கேட்டு அதை மட்டும் செய்யலாம்.
உடல் உறுப்புகள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ங்க

இந்த மாதிரி நிறைய வழி இருக்கு, நா உதவி செஞ்ச மாதிரி இல்லாம கொஞ்சம் யோசிச்சி செய்யுங்க.

Monday, 26 December 2011

கண்டிஷனா சொல்லிபுட்டேன்

அட ஒன்னு இல்லைங்க .... நமக்கு தெரிஞ்ச பொண்ணு ஒருத்தங்க கல்யாண வசுல இருக்காங்க. அவங்க கிட்ட போய் உங்க எதிர் கால கணவன் அப்புறம் அவங்க வீட்ல எப்டி இருக்கணும்னு எதிர் பாக்குறிங்கன்னு தெரியாம கேட்டு தொலைச்சேன் (ஏன்டா கேட்டோம்னு பின்னாடி தான் ரொம்ப பீல் பண்ணேன்) நீங்களும் படிச்சு பீல் பண்ணுங்க.

நா கேட்ட உடனே ஒரு சின்ன build-up குடுத்து ஆரம்பிச்சாங்க.... actually  நா என்ன expect  பண்றேனா ( எனக்கு லேசா தல சுத்துற மாதிரி இருந்தது)

கண்டிஷன் நம்பர் 1 : பையனோட அப்பா அம்மா இருக்க கூடாது ( அட கூட தாங்க இருக்க கூடாது )
கண்டிஷன் நம்பர் 2 : கூட பொறந்தவங்க யாரும் இருக்க கூடாது, அப்படியே இருந்தாலும் இவங்க கல்யாணத்துக்கு அப்புறம் வர கூடாது
கண்டிஷன் நம்பர் 3 : பையன் பெரிய வேலைல இருக்கனும், கொறஞ்சது ஒரு ஐம்பது ஆயிரதுக்கு மேல சம்பாதிக்கணும்
கண்டிஷன் நம்பர் 4 : சொந்த வீடு, கார் அப்புறம் இன்னும் என்ன என்ன வேணுமோ எல்லாமே இருக்கனும்
கண்டிஷன் நம்பர் 5 : பையன் software engineer  ஆக இருந்த கண்டிப்பா வெளிநாடுக்கு கூட்டிட்டு போகணும்
கண்டிஷன் நம்பர் 6 :  இவங்க சொல்றத மீறி ஏதும் செய்ய கூடாது, அவ்ளோ பணிவா இருக்கனும்

இன்னும் நிறைய சொன்னங்க, இத கேக்கறப்பவே நா பாதி கோமாக்கு போய்டேன். அதுக்கு அப்புறம் சொன்னது எல்லாம் கேக்கலங்க. கொஞ்ச நஞ்சம் இருந்த கல்யாண ஆசையும் போய்டிச்சு.

தயவு செஞ்சி பசங்களே எந்த பொண்ணு சரின்னு சொல்லுதோ உடனே தாலி கட்டிடுங்க. என்னா எப்ப மாறுவங்கனு சொல்ல முடியாது.