Monday, 9 July 2012

திருட்டு

திருட்டு போன உங்களோட பொருட்கள்ல எதாவது திரும்ப கிடைச்சா  உங்களுக்கு எப்படி இருக்கும். அது செல் போன் திரும்ப கெடச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்.

ஆமாங்க திருட்டு குடுக்கற பொருள்ல இப்ப செல் போன் தான் முதல் இடத்துல இருக்கு. ஏன்ன விக்கிறது ரொம்ப சுலபம். ஒளிச்சி வெய்கவும்  சுலபம்.

இதுல இருந்து நாம தப்பிக்க நிறைய வழிகள் இருக்கு. நாம யாரும் உபயோகிக்கறது இல்ல. கொஞ்சம் மெனக்கெட்டு செய்யவேண்டிய வேலை தான். ஆனா காஸ்ட்லியான செல்போன் நமக்கு முக்கியம் இல்லையா. அதனால கொஞ்சம் நேரத்தை செலவு செஞ்ஜா தப்பு இல்லன்னு தோணுது.

முதல்ல கதை அப்புறம் தான் கருத்து. ஏன்னா முதல்ல கருத்து சொன்னா பய புள்ளங்க ப்ரௌசெர்ல நம்ப ப்ளாக் இருக்குற பக்கத்துக்கு தல இல்ல கால் கூட வெச்சி படுக்க மட்டேன்கரங்க. இதுக்கு சாட்சி என் வலை தளத்தில் இருக்குற பதிவுகளும் அதன் பின்னுட்டமும் தான். சரி கதைக்கு வருவோம்.

கதை 1:

இது நடந்தது பெங்களூர். நண்பரும் அவர் மனைவியும் ஆட்டோல வீட்டுக்கு வரும்போது மொபைல் போன் ஆட்டோல  தவறி விழுந்துடிச்சி. அது அவங்க ரெகுலரா வர ஆட்டோ. போன் தொலைஞ்ச உடனே அவங்க ஆட்டோ ஓட்டுனர் கிட்ட கேட்டிருகாங்க, அவர் போன் எடுத்தும் ஆட்டோல இல்லன்னு சொல்லிட்டார். நண்பரும் ரெகுலர் ஆட்டோகாரர் பொய் சொல்ல மாட்டார், அதனால போன் வேறு எங்கயோ தொலைஞ்சி போச்சின்னு நெனச்சி விட்டுட்டார். ஒரு சில நாள் கழிச்சி அவரோட முக புத்தக அதாங்க "FACEBOOK" அந்த ஆட்டோ ஓட்டுனர்  போட்டோ ஒன்று புதிதாக upload  செய்யபட்டிந்தது. நண்பருக்கு அப்போது தான் நினைவு வந்தது. அந்த செல் போனில் எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் facebook இல் upload  செய்யும்படி செய்தது நினைவில் வந்தது. அந்த ஆட்டோ ஓட்டுனர் போட்டோவை ஒரு பிரிண்ட் எடுத்து அவரிடம் சென்று கொஞ்சம் மிரட்டி கேட்டபோது போன் இருப்பதை ஒத்துக்கொண்டார்.


கதை 2:

நடந்த இடம் கோவை. உடன் பணி புரியும் சகோதரன் ஒருவன் தன் செல் போன் தொலைத்துவிட்டான். அதை கண்டு பிடிக்க காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்திருந்தான் .  சில மாதங்களில் அதை  பற்றிய நினைவுகள் மறந்து போன சமயத்தில், அவனுடைய செல் போன் எண்ணிற்க்கு ஒரு குறுஞ்செய்தி (அது தாங்க SMS) வந்தது. அவன் தொலைந்து போன செல் போனில் வேறு எந்த சிம் கார்டு போட்டாலும் அவனுடைய போன் நம்பர்க்கு sms வரும்படி எதோ செய்திருக்கிறான். தொலைந்து போன செல் போன் யாரிடமோ கிடைக்க அவர் தன் சிம் கார்டை அதில் போட்டிக்கிறார். நம் சகோதரன் கொஞ்சம் புத்திசாலி, அந்த நும்பெர்க்கு போன் செய்து அவரை பற்றி கேட்டு கொண்டு, போன் தொலைந்த புகார் பற்றி விசாரிக்கும் காவல் துறை அதிகாரியை நேரில் சந்தித்து விவரம் கூற, அவர் அந்தநபருக்கு போன் செய்து கேட்க்க, அவர் சில மணி நேரங்களுக்கு முன்பு தான் அந்த செல் போனை விலைக்கு வாங்கியதாக சொல்லிருக்கிறார். நம் காவலர் அந்த செல் போன் தொலைந்து போய் , அதற்க்கு புகார் செய்ய பட்டிருப்பதை பற்றி சொல்ல போன் திரும்ப ஒப்படைக்க பட்டது.

இதுல என்னன்னா போன் திருட்டு குடுத்த நபர்கள் இருவரும் படித்தவர்கள், அதனால இந்த மாதிரி செய்ய முடிந்தது. ஆனா படிக்காத, தொழில் நுட்பம் பற்றி தெரியாதவர்கள் பாடு திண்டாட்டம் தான். அவர்கள் தான் ஜாக்கிரதையாய் இருக்கனும்..


இதனால் நான் சொல்ல வருவது என்னன்னா "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு நம்ப பெரியவங்க சொன்னது தான் நானும் சொல்றேன்.

இன்னிக்கு வேலை கொஞ்சம் குறைச்சல் அதனால தான், இந்த சொற்பொழிவு.


2 comments:

  1. அண்ணா..அருமையான பதிவு..கலக்குங்க..மேலும் இது போன்ற பல பதிவுகளை எதிர்பார்கிறேன்..

    ReplyDelete
  2. நன்றி சகோ.....

    ReplyDelete