இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
எங்க ஆபீஸ்க்கு பக்கத்துல ஒரு பஸ் ஸ்டாப் இருக்கு. அங்க ஒரு வயசான பெரியவர் பஸ்க்கு காத்திருந்தார். அப்ப அவருக்கு திடிர்ன்னு மயக்கம் வந்திருச்சி. அங்க இருந்த சிலர் அவசர உதவி 108 க்கு போன் பண்ணி விவரம் சொல்லி வண்டிய வர சொல்லிட்டாங்க.
அந்த வண்டி உடனே வந்தது. அவங்க உடனே அவர கொண்டு போகாம, அங்க இருக்குறவங்க கிட்ட விசாரிச்சி எதோ ரெகார்ட் எழுத ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச நேரத்துல்ல அவர்க்கு தானே மயக்கம் தெளிஞ்சி அவர் சகஜ நெலைமைக்கு திரும்பிட்டார்.
அதுக்கு அப்புறம் தான் அந்த காமெடி கலாட்டா. அவர் எழுந்ததும் அந்த வண்டி வந்தது. அவர் நா சரியிட்டேன்னு சொன்னாலும் அவங்க கேக்கல. அவர கதற கதற (இது நம்ப பில்ட் அப்) 108 ல ஏத்திகிட்டு (கூட்டிட்டு) போய்ட்டாங்க.
அங்க இருந்தவங்க கேட்டதுக்கு ரெகார்ட் எழுதியாச்சி அதனால அவர கண்டிப்பா கூட்டிட்டு போகணும்ன்னு சொல்லிட்டாங்க.
அவர பாக்க ரொம்ப பாவமா இருந்தது. அவங்க கடமை உணர்சிய என்னன்னு சொல்ல.
மெசேஜ்க்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்ல. ஆனா இந்த படம் கொஞ்சம் பொருத்தமா இருக்கும்ன்னு பட்சி சொல்லிச்சி (அதாங்க நம்ப பிரைன்). அசிங்கமா நீங்க எதாவது சொல்ல்றதுக்குள்ள நா எஸ்கேப்.
மீண்டும் அடுத்த பதிவு விரைவில்.

idhu unmayaa nadandhudhaa? :)
ReplyDeleteyes uday.... sidique sir said....
ReplyDelete