Tuesday, 17 January 2012

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு ( தமிழ்ல சொன்ன கடன் அட்டை). நம்ப ஊர்ல அரிசி, பருப்பு எல்லாம் இலவசமா கிடக்குதோ இல்லையோ, கிரெடிட் கார்டு இலவசமா வீடு தேடி வருது, அதும் நீங்கள் சரி என்று சொல்லிய அடுத்த ஒரு சில நாட்களில்.

இந்த இலவசத்திலும் சில பல பிரச்சினைகள் தானாகவே முளைக்கிறது ( ஓசில கெடைக்குதுன்னு வாங்குனிங்கள்ள இப்ப அனுபவினு சிலர் சொல்றது இந்த பதிவை எழுதிகிற போதே எனக்கு கேக்குது.)

என்ன மாதிரி தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு கிரெடிட் கார்டு வாங்கறது ரொம்ப சுலபம். எப்படினு கேடிங்கன்ன, எங்களுக்கு சம்பளம் எப்படியும் ஒரு தனியார் வங்கி மூலமாக தான் வரும் (நீ செய்யற வேலைக்கு சம்பளம் வேற தரங்களா, பாதி நிறம் முக புத்தகம், ட்விட்டர், ஜிமெயில் இந்த மாதிரி வேலைகள செஞ்சிட்டு நேரம் கெடச்ச கொஞ்சம் வேலையும் செய்யறானு நண்பர்கள் அடிக்கடி சொல்லறது இப்பதாங்க ஞாபகம் வருது). முதல்ல அந்த பாங்க்ல இருந்து சேமிப்பு கணக்கு (சம்பள கணக்குனு கூட சொல்லலாம்) ஆரம்பிக்க, விண்ணப்பத்தை நிரப்பி தர சொல்லுவாங்க, அதுலயே நம்ப போன் நம்பர், ஈமெயில் மற்றும் தற்காலிக, நிரந்தர முகவரி எல்லாமே சம்பந்தப்பட்ட பேங்க் க்கு போய் சேந்துடும்.

ஒரு 10 நாளைக்கு எந்த தொந்திரவும் இருக்காது. அப்புறம் அந்த பாங்க்ல இறுதி அதன் கிரெடிட் கார்டு ஆபிசர் போன் செய்வார், பேசுறது ரொம்ப கனிவா தான் இருக்கும், ஏன்னா வியாபாரம் நடகனும்ல்ல. இது எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம் தான். இப்ப என்ன சொல்லவரனு கேக்குறிங்க, ஒரே நிமிஷம் ஒரு கோர்வையா சொல்ல முயற்சி பண்றேன், ஆனா அந்த கருமாந்திரம் மட்டும் எனக்கு வர மாட்டேன்குது,

இந்த மாதிரி ஓசில வந்த கிரெடிட் கார்டு நானும் 2 - 3 வாங்கி வெச்சிருக்கேன். எல்லோர மாதிரியும் எனக்கும் சில பிரச்சினை வந்தது, ஆனா நாம்ப கொஞ்சம் அலெர்ட், அதனால கொஞ்சம் பேசி, மிரட்டி அதை சுமுகமா முடிச்சிட்டேன்.


ஆனா போன மாதமும், இந்த மாதமும் ஒரு புது ரூபத்துல பிரச்சினை வந்தது. அது என்னன்னா ஒரு பேங்க் கிரெடிட் கார்டுல ஒரு 15 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினேன். அத "EMI " அதாவது அந்த தொகையை மூன்று முதல் பனிரெண்டு மாத தவணைகளில் செலுத்தலாம். நம்ப கைல இவ்ளோ பணம் இல்ல (அப்ப நீயெல்லாம் "சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்யறேன்னு வெளில சொல்லதனு ஒரு அசரிரி கேக்குது), என்னங்க பண்றது எங்களுக்கும் கொஞ்சம் கமிட்மென்ட் இருக்குல்ல.


சரி வாங்கினதுக்கு பணம் கட்டிதாங்க ஆகணும், எனவே பேங்க் கஸ்டமர் கேர் சென்டர்க்கு போன் பண்ணி, விவரம் சொல்லி, "EMI" பற்றி கேட்டா, ஒரு குண்டு தூக்கி போட்டாங்க, உங்க கார்டுக்கு இந்த வசதி இல்லன்னு சொல்லிட்டாங்க. சரி வேற எதாவது செஞ்சி உதவி செய்ய முடயுமானு கேட்ட, தற்சமயம் உங்களுக்கு இதில் எந்த உதவியும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க.


யோசிச்சு பாத்ததுல்ல, இந்த பேங்க் இல்லைன்னா என்ன அதுதான் இன்னும் இரண்டு பாங்க்ல கிரெடிட் கார்டு வாங்கிருக்கோம்ல அவங்க கிட்ட கேக்கலாம்னு நெனச்சி அடுத்த பேங்க் கஸ்டமர் கேர்க்கு போன் பண்ணி பேசுனா ஒரு உபயோகமான தகவல் தந்தாங்க, அதாவது அந்த வங்கிக்கு இந்த வங்கி பணம் செலுத்திவிடும் அதை நாம் தவணை முறையில் செலுத்தலாம்.


சரி என்று சொல்லி செலுத்த வேண்டிய வங்கி இன் கிரெடிட் கார்டு நம்பர் மட்டும் சொல்லிவிட்டு மற்ற விவரங்களை சொல்லி கொஞ்சம் நிம்மதியா இருந்தேன். ஒரு 2 நாள் கழித்து ஒரு குறும் செய்தி (அதாங்க sms ) என்னோட கிரெடிட் கார்டு ஒரு மும்பை ஆன்லைன் கம்பெனி மூலமாக ருபாய் 1000 சுரண்டி இருப்பதாக அந்த தகவலில் இருந்தது.


உடனடியாக அந்த வங்கி கஸ்டமர் கேர் சர்வீஸ் நம்பரில் போன் செய்து விவரத்தை கூறினேன். அவர்களும் சரிபார்த்து அதை உறுதி செய்தார்கள். நான் இருக்கும் இடம் மற்றும் அந்த "Transaction" நான் செய்யவில்லை என்று சொல்லி, அதை சரி செய்து, கிரெடிட் கார்டு பிளாக் செய்து, வேறு கிரெடிட் கார்டு வாங்கி, அதுக்கு 100 ருபாய் தண்டம் அழுது, இதோடு போனதே என்று நிம்மதியா இருந்தேன்.


அடுத்த மாதமும் கொஞ்சம் மருத்துவ மனை செலவிற்காக கொஞ்சம் கார்டு ஐ சுரண்ட, திரும்பவும் இதே தொல்லை, ஆனால் இந்தமுறை கொஞ்சம் யோசித்து, வங்கி கஸ்டமர் கேர் அதிகாரிகளிடம் பேசி, இந்த தொடர் சுரண்டல்களை பற்றி சொல்லி, இது தொடரும் பட்சத்தில் நான் கார்டு ஐ வங்கியில் திருப்பி செலுத்திவிட்டு உரிய வழக்கு தொடர போவதாக சொன்னேன். அவர்கள் இரண்டு நாள் அவகாசம் கேட்டார்கள், இரண்டு நாள் கழித்து போன் செய்தேன், அதற்குள் எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதாக கூறினார்கள்.


நண்பர்களே கிரெடிட் கார்டு சாபமும் அல்ல வரமும் அல்ல. யோசித்து செயல் படுங்கள். இது சின்ன விஷயம் தான், ஆனால் நேரமும், போன் பில் என நிறைய நம் பக்கத்தில் நாம் செலவிட வேண்டும்.

எனக்கு வந்த தொல்லையை பற்றி தெரிந்து கொள்ள

http://www.consumercourt.in/credit-card/43371-hdfc-bank-credit-card-carefull.html 

இதை படித்த பிறகு தான் என்னைப்போல் நிறைய பேர் இப்படி பாதிக்க பட்டிருப்பது தெரிய வந்தது.

கடந்த ஆண்டு முதலாக இந்த பிரச்சினை இருந்தாலும், அதை இன்னும் வங்கியன் தொழில் நுட்ப பிரிவில் சரி செய்யது வருத்தம் அளிக்கிறது.

1 comment:

  1. உபயோகமான பதிவு.

    //நண்பர்களே கிரெடிட் கார்டு சாபமும் அல்ல வரமும் அல்ல. யோசித்து செயல் படுங்கள்.//

    உண்மை தான்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete