Friday, 30 December 2011

ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு ஈமெயில் வந்தது. அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் forum (அதாவது உங்களுக்கு தொழில் நுட்பத்தில் எதாவது சந்தேகம் இருந்தால் இதன் வாயிலாக நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்) இணையத்தின் முகவரி இருந்தது.


அதில் ஒரு நபர் சந்தேகம் ஒன்று கேட்டிருந்தார். விண்டோஸ் மென்பொருள் இரண்டு விதமான (OS ) operating system கொண்டது. எல்லா விண்டோஸ் மென்பொருள்களும் 34  bit  மற்றும் 64 bit  என்னும் இரண்டு விதமான தொழில் நுட்பங்களில் வெளிவருகிறது(நமக்கு தெரிஞ்சது இந்த இரண்டு தான்)


இதில் ஒருவர் ஒரு சந்தேகம் கேட்டுள்ளார்.


-------------------------------------------------------------------------------------------------------------


I have a question,

I recently took delivery of my new Dell, which came with the 32bit version of Windows 7, however the PC is capable of running at 64bit.

If I install Windows 7 32bit twice would that make it 64bit?

Any help would be greatly appreciated.

-------------------------------------------------------------------------------------------------------------
இதில் என்ன கொடுமைன்னா. விண்டோஸ் 32 bit  software  இரண்டு முறை இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் 64  bit  software கிடக்குமா என்று இந்த நபர் தனது சந்தேகத்தை பதிவு செய்து இருக்கிறார்.

அதாவது 32 + 32  = 64  எப்படி நம்ப டெக்னாலஜி. இந்த புலவரின் சந்தேகத்தை தீர்த்து வைப்பவருக்கு  எதாவது குடுப்பாங்க. அட்ரஸ் கேட்டு போய் வாங்கிக்குங்க.

இதெல்லாம் தெரிஞ்சி செய்யரன்களா, இல்ல தெரியாம  செய்யரன்களா தெரியல. நமக்கு தான் ஒன்னும் தெரியலன்னு நெனச்சா, நம்பள விட மக்கு பசங்க நிறைய பேர் இந்த உலகத்துல இருக்காங்க.

இவர் கேட்டதுக்கு 2 பேர் நல்ல விதமா பதில் சொல்லி இருக்காங்க, என்ன சொன்னாங்கனா.


------------------------------------------------------------------------------------------------------------

Dear Mr. Fwitt,

Install 32 bit four times and u get a 128-bit computer. This is more powerful.

The last time i read, MSFT is still working on it, so u might actually create history.

A 128-bit architecture would be capable of using as much RAM as there is data on earth, estimated to be about 2^70 bytes, or 1.2 zettabytes.

So, there u go..
------------------------------------------------------------------------------------------------------------



Dear Mr. Fwitt

If you want you can install Win7 64Bit ½ time to get Win7 32Bit ....

I tried this last week, and it did work, believe me I work as ::::  IT Systems & Network Administrator....

I am an  IT pro

I promise you that you will be more than happy because it makes your Operating System act faster...
------------------------------------------------------------------------------------------------------------

அதாவது 32 பிட் விண்டோஸ் software  நான்கு முறை இன்ஸ்டால் செய்தால் நீங்கள் 128 பிட் விண்டோஸ் ஐ உங்கள் கணினியில் பெறலாம். இவ்வாறு செய்வதால் உங்களுக்கு பின்னால் வரும் சந்ததிகள் இதேபோல் செய்து புதிய வரலாற்று சாதனைகளை செய்யலாம். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.


அதே நீங்கள் 64  விண்டோஸ் சாப்ட்வேர் ஐ பாதி அளவுக்கு (50 %) இன்ஸ்டால் செய்தால் நீங்கள் விண்டோஸ் 32  பிட் ஐ மிக எளிதாக பெறலாம். (எப்புடி நம்ப ஐடியா)

அட ராமா என்ன ஏன் இந்த அறிவாளி (சத்தியமா நான் தான்) எழுதற கண்ட்ரவி எல்லாம் படிக்க வைகிறன்னு நீங்க மனசுல நெனச்சாலும், நேரா திட்டினாலும் நா எழுதறத விட போறது இல்ல. அத படிச்சே ஆகணும் அது உங்க தலை எழுத்து.

Thursday, 29 December 2011

அனுபவம் புதுமை

தலைப்பை பார்த்தவுடன் தப்பா நினைக்காதிங்க. நா இன்டெர்வியு ல அனுபவிச்ச எழுத்து தேர்வு பற்றி தாங்க சொல்ல போறேன்.  நா வேலை பாக்கிறது ஒரு தகவல் தொழில் (web development ) கம்பெனி. அடுத்த கம்பெனிக்கு தாவலம்னு யோசிச்சு ஒரு கம்பெனிக்கு apply  பண்ணேன். அவங்களும் என்ன ஒரு நாள் நேர்ல வரசொன்னங்க. நானும் போனேன்.

என்ன மாதிரியே நிறைய பேர வர சொல்லிருந்தாங்க. மொத்தம் 3 ரவுண்டு (இன்டெர்வியு ல தாங்க ) முதல் ரவுண்டு எழுத்து தேர்வு. அதற்கான நேரம் 1 மணிநேரம். இரண்டாவது ரவுண்டு (technical  round  - சத்தியமா தமிழ் ல என்னனு தெரியல) மூன்றாவது நேர்முகம் (HR officer  கூட)


இவ்ளோ தாங்க இதுக்கு தான் இவ்ளோ பில்ட் up குடுக்கிரியனு நீங்க கேக்கறது என் காதுல விழுது. இதுல highlight  என்னன்னா எப்படி கிரிக்கெட்ல சேவாக் நல்லா அடிச்சி விளையாடுவர்னு நினைகிறப்ப duck  அவுட் ஆனா எப்படி இருக்குமோ அப்படி தான் நானும். நல்லா பண்ணுவேன்னு பக்கத்து வீடு, கீழ் வீடு இப்படி எல்லா வீட்டு காரங்களும் காலைல வாழ்த்து சொல்லி அனுப்பினாங்க. நானும் சந்தோசமா கெளம்பினேன்.

முதல் ரவுண்டு வந்தது. நானும் இப்ப வேல செய்ற ஆபீஸ்ல எப்படி இன்டெர்வியு பண்ணகளோ அதே மாதிரி தான் இருக்கும்னு நெனச்சி நம்பி போனேன். இன்டெர்வியு வினா தாள் கைல பார்த்த உடனே எனக்கு மயக்கமே வந்திரிச்சி. பின்ன எப்படி வராம. அதுல அவங்க கேட்டது புதுசு. அப்படி இப்படி சமாளிச்சி நா எழுதிட்டேன்.

அதுல ஒரு சின்ன சந்தோசம் என்னன்னா சில கேள்விகள் எனக்கு தெரிஞ்சதாவே வந்தது. தெரிஞ்ச கேள்விக்கு விடய எழுதிட்டு, தெரியாத கேள்விக்கு "இங்கி பிங்கி" (நீங்க துப்பர சத்தம் கேக்குது) போட்டு எழுதி (20 நிமிஷத்துல ) குடுத்துட்டு வந்து வெயிட் பண்ணேன். பேசாம போகவேண்டியது தானே சொல்றிங்களா? ஒரு குருட்டு நம்பிக்கை தான். எதாவது அதிசயம் நடந்து நம்பள இரண்டாவது ரௌண்ட்க்கு கூப்பிட மாட்டங்களானுட்தான் இருந்தேன்.

அப்போ தான் அந்த கம்பெனி HR வந்தாங்க, கைல ஒரு பெரிய லிஸ்ட் வெச்சிருதாங்க. கொஞ்சம் பேர கூட்டிட்டு தனிய போனாங்க. நா நெனச்சேன், அவங்க எல்லாம் தேர்வு ஆனவங்கனு. அப்புறம் தான் தெரிஞ்சது, அவங்க எல்லோரும் பெயில் ஆனவங்கனு.

சந்தோசத்துல தல கால் புரியல, நம்ப பேர் இல்ல தான அதனால தான். கொஞ்ச நேரம் கழிச்சி இன்னொரு லிஸ்ட் கொண்டு வந்தாங்க. அதுல என் பேர் இருந்தது. அப்பவும் நா என்ன நெனச்சேன்ன, நம்பள இரண்டாவது ரௌண்ட்க்கு  கூட்டிட்டு போறங்கனு. கூட்டிட்டு போன உடனேயே வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க (இதுக்கு நானே வந்திருக்கலாம்) நானே வந்திருந்த கூட பேர் சொல்றப்ப யார்னாது தெரியாம போயிருக்கும்.

நா செஞ்ச தப்பு என்னன்னா அங்க என்ன மாதிரி கேள்வி கேப்பாங்கன்னு யோசிக்காம போனது ( யோசிச்சா கிழிசிருப்பியன்னு கேக்காதிங்க )


எனவே இந்தமாதிரி போறப்ப கொஞ்சமாது படிச்சிட்டு போங்க. அங்க கேட்ட கேள்வில கொஞ்சம் சாம்பிள் இங்க. யாருக்காது பதில் தெரிஞ்ச சொல்லுங்க பாப்போம்.

 







 

 



என்ன பாக்கறப்பவே தல சுத்துதா. நல்லா வேணும். என்னக்கும் அப்படி தானே இருந்திருக்கும்.


பதநீர் (தெலுவு)

பதநீர்  பார்பதற்கு குளுகோஸ் தண்ணீர் போல் இருந்தாலும் குளுகோஸை விட சுவை மிக்கது.  நிறைய மருத்துவ குணம் கொண்டது. நகரங்களில் இருபவர்களை விட கிராம புறங்களில் இருப்பவர்களுக்கு இதை பற்றி நன்றாக தெரியும்.

பனை மரத்தின் கிளை என்னும் பாலையிளிருந்து பதநீர் எனும் தெலுவு கிடைக்கும், அதே தெலுவில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையானதாகவும், அதே நேரம் கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும். இது நம்மக்கு தேவை இல்லை நாம் வெறும் பதநீர் (அதாவது சுண்ணாம்பு சேர்த்து கிடப்பது) மட்டும் அருந்தலாம்.

நான் நகர வாசியாக இருந்தாலும் என் பள்ளி பருவங்களில் பதநீர் பருகியது உண்டு. அந்நாட்களில் ஒரு டம்பளர் 10 பைசாவுக்கு எனது தாத்தா வாங்கி தருவார். இப்பொது ஒரு சொம்பு பதநீர் ருபாய் 15  க்கு தான் கிடைக்கிறது. அது சரி விலைவாசி ஏற்றத்தை தான் தினமும் பார்கிறோமே.  அப்போதெல்லாம் மார்ச் முதல்  மே மாதம் வரை கிடைக்கும். இன்றைக்கு டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரை கிடைக்கிறது.  ஆனால் அன்றைக்கு இருந்த சுவை மற்றும் தூய்மை இப்பொது கிடைப்பது இல்லை. இருந்தாலும் உடல் குளுமை மற்றும் சில பல மருத்துவ குணங்கள் இருப்பதால் தாரளமாக உட்கொள்ளலாம். அதிலும் பதநீரில் இளம் நுங்கு போட்டு தருகிறார்கள் அதன் சுவையை அடித்து கொள்ள முடியாது.

இதில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி "நோய் தீர்க்கும் பதநீர்" என்ற தலைப்பில் நண்பர் "குனதமிழ்" தமிழ் தோட்டம் என்னும் இணையத்தில் ஒரு சிறு கட்டுரை எழுதிஉள்ளார். 

அழிந்து வரும் சுழலில் இருக்கும் பனை விவசாயம் பற்றி மற்றொரு நண்பர் "
இயற்கை வழி விவசாயம் என்னும் பதிவில் பகிர்ந்துள்ளார்.

பதநீர் மட்டும் அல்லாமல் பனை மரத்தில் இருந்து நாம் பெரும் சில பொருட்கள்

1 . பனை கிழங்கு

2 . பனம் பழம்

3 . நுங்கு

4 . சேவாய் (முற்றிய பணங்காயிலிருந்து சதை பகுதி)

5 . பனை ஓலை

இன்னும் தென்னை போல பல விதமாக பனை கூட நமக்கு பயனுள்ள ஓர் மரமாகவே இருக்கிறது. முடிந்த வரை இதன் பயன்பாட்டை அதிகரித்து இதன் அழிவை சரிவிலிருந்து மீட்க நம்மால் ஆனா முயற்சிகளை செய்யலாம்.

Wednesday, 28 December 2011

என் பங்குக்கு நானும்

நிறைய எழுதலன்னு நினைப்பேன். ஆனா எந்த தலைப்புல எழுதனும்னு நெனச்சனோ அது மறந்து போய்டுது. அதனால எழுதனும்னு நினைக்கிறவங்க உடனே எழுதிருங்க.....

யோசிச்சு  யோசிச்சு என்ன எழுதலாம்னு கண்டு பிடிச்சிட்டேன். நிறைய பேர் எழுதிருப்பங்க. என் பங்குக்கு நானும் ( கண்டுக்காம படிங்க )

பிளாஸ்டிக் குப்பைகளை பற்றி தான் இன்றைக்கு எழுத போகிறேன்.

ஏன் குப்பை போடரிங்கனு கேக்கல, எப்படி அதை தவிர்க்கலாம்ன்னு சொல்றேன்.

நாம அன்றாடம் பயன்படுத்தும் பொருளா ஆய்டிச்சி பிளாஸ்டிக்.

1 . பால்
2 . மளிகை
3 . காய் கறி
4 . தின்பண்டங்கள்

இதர வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாமே பாலிதீன் கவர் இல்லாம வருவது இல்ல.

நாம் அதை பயன் படுத்தும் விதம் தான் தவறாக உள்ளது. பிளாஸ்டிக் பைகளை உடைத்து அதில் உள்ளவற்றை வெளியே எடுக்கும் போது இருக்கும் கவனம் அதற்க்கு பிறகு இருப்பது  இல்லை.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். இவ்வாறு வீட்டிக்கு வரும் பிளாஸ்டிக் பைகளை ஒரு இடத்தில் சேமித்து வையுங்கள். ஒரு மாதம் மட்டும் இப்படி சேமிக்கும் போது நாம் தேவை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளின் அளவை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இப்படி செய்வதால் தேவை இல்லாமல் வெளியில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவும் குறையும். இவ்வாறு சேமிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கி கொள்வதருக்கு சில அரசு மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவங்களும் உள்ளன.

சில மாநகராட்சிகள் இதற்காக தனி பைகளை வழங்கி உள்ளன. சுற்று சூழலால் பாதிக்க போவது நாம் மட்டும் அல்ல நமக்கு பின்னால் வரும் சந்ததிகளும், சில ஜீவராசிகளும் தான். ஆரம்ப காலத்தில் எல்லாமே சிரமமாக தான் இருக்கும். ஒரு மாத காலம் நமக்கு இந்த பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவர உதவியாக இருக்கும்.  அதன் பிறகு இது நம் அன்றாட செயல்களில் ஒன்றாக ஆகிவிடும்.

என்னடா இவ்ளோ சொல்றனே இவன் எப்படின்னு கேக்கறது எனக்கும் கேக்குது, நா கடந்த 6 மாத காலமா இத தவறாம செஞ்சிட்டு இருக்கேன். இப்படி சொல்றதுக்கு நாம தகுதியனவனா இருந்த தான அடுத்தவங்கள செய்ய சொல்ல முடியும்.

பொதுநலமா இத யோசிக்காம, சுய நலமா இத யோசிங்க கண்டிப்பா செய்ய முடியும்.

இந்த வருடம் புது வருட உறுதிமொழியா  இதுவும்  இருக்கட்டும் .  

Tuesday, 27 December 2011

குறும் (பு) படங்கள்





காபி வித் ஆர்ட்

 காபி குடுக்கறப்ப இப்படி குடுத்த எப்படிங்க குடிக்க மனசு வரும். ஆனா விலைய கேட்டிங்கன்னா உங்களுக்கு மயக்கமே வரும். இந்த மாதிரியான காபி எல்லா காபி ஷாப் கிடைக்குது. (அதுக்காக உங்க வீட்டுக்கு பக்கதுல இருக்குற டீ கடைல போய் இந்தமாதிரி காபி கேட்டின்கன்ன கண்டிப்பா சுடு தண்ணி எடுத்து மூஞ்சில ஊத்திருவங்க) விலை ஒரு கப் ருபாய் முப்பதுல இருந்து ஆரம்பிக்குது . நீங்க என்ன சொல்றிங்கன்னு கேக்குது. என்னடா ஒரு லிட்டர் பால் 33 ருபாய் தானே ஆனா ஒரு கப் காபி முப்பது ரூபாய்க்கு குடிக்கணுமா ? எப்படி செலவு செய்றதுன்னு தெரியாம இருக்கற நண்பன் கூட இருந்த கூட்டிட்டு போங்க.