Wednesday, 28 December 2011

என் பங்குக்கு நானும்

நிறைய எழுதலன்னு நினைப்பேன். ஆனா எந்த தலைப்புல எழுதனும்னு நெனச்சனோ அது மறந்து போய்டுது. அதனால எழுதனும்னு நினைக்கிறவங்க உடனே எழுதிருங்க.....

யோசிச்சு  யோசிச்சு என்ன எழுதலாம்னு கண்டு பிடிச்சிட்டேன். நிறைய பேர் எழுதிருப்பங்க. என் பங்குக்கு நானும் ( கண்டுக்காம படிங்க )

பிளாஸ்டிக் குப்பைகளை பற்றி தான் இன்றைக்கு எழுத போகிறேன்.

ஏன் குப்பை போடரிங்கனு கேக்கல, எப்படி அதை தவிர்க்கலாம்ன்னு சொல்றேன்.

நாம அன்றாடம் பயன்படுத்தும் பொருளா ஆய்டிச்சி பிளாஸ்டிக்.

1 . பால்
2 . மளிகை
3 . காய் கறி
4 . தின்பண்டங்கள்

இதர வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாமே பாலிதீன் கவர் இல்லாம வருவது இல்ல.

நாம் அதை பயன் படுத்தும் விதம் தான் தவறாக உள்ளது. பிளாஸ்டிக் பைகளை உடைத்து அதில் உள்ளவற்றை வெளியே எடுக்கும் போது இருக்கும் கவனம் அதற்க்கு பிறகு இருப்பது  இல்லை.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். இவ்வாறு வீட்டிக்கு வரும் பிளாஸ்டிக் பைகளை ஒரு இடத்தில் சேமித்து வையுங்கள். ஒரு மாதம் மட்டும் இப்படி சேமிக்கும் போது நாம் தேவை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளின் அளவை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இப்படி செய்வதால் தேவை இல்லாமல் வெளியில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவும் குறையும். இவ்வாறு சேமிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கி கொள்வதருக்கு சில அரசு மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவங்களும் உள்ளன.

சில மாநகராட்சிகள் இதற்காக தனி பைகளை வழங்கி உள்ளன. சுற்று சூழலால் பாதிக்க போவது நாம் மட்டும் அல்ல நமக்கு பின்னால் வரும் சந்ததிகளும், சில ஜீவராசிகளும் தான். ஆரம்ப காலத்தில் எல்லாமே சிரமமாக தான் இருக்கும். ஒரு மாத காலம் நமக்கு இந்த பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவர உதவியாக இருக்கும்.  அதன் பிறகு இது நம் அன்றாட செயல்களில் ஒன்றாக ஆகிவிடும்.

என்னடா இவ்ளோ சொல்றனே இவன் எப்படின்னு கேக்கறது எனக்கும் கேக்குது, நா கடந்த 6 மாத காலமா இத தவறாம செஞ்சிட்டு இருக்கேன். இப்படி சொல்றதுக்கு நாம தகுதியனவனா இருந்த தான அடுத்தவங்கள செய்ய சொல்ல முடியும்.

பொதுநலமா இத யோசிக்காம, சுய நலமா இத யோசிங்க கண்டிப்பா செய்ய முடியும்.

இந்த வருடம் புது வருட உறுதிமொழியா  இதுவும்  இருக்கட்டும் .  

No comments:

Post a Comment